ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பிராம்மி

ADVERTISEMENTS









பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர்.  சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.

பிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.

பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள்  கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

பிராம்மி பாடல்:

பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டுநாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.

பிராம்மி  என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:

ஆசன மூர்த்தி மூலம்

ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:

பிராம்மி காயத்ரி:

ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்ப்புஜா விஸாலாட்சி;தட்த காஞ்ச நசந்நிபா;வரதாபய ஹஸ்தா சகமண்டல் வக்ஷ மாலிகா;ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,ஜடா மகுட தாரிணீ,ரக்த பத்மாஸ நாசீகாப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே

மூலமந்திரம்:

ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:

அர்ச்சனை :

ஓம் பிராம்மியை நமஓம் பிதாமகாயை நமஓம் பரமேஷ்டியை நமஓம் பத்மஜாயை நமஓம் கமண்டலுதாயை நமஓம் காவேரிஜனகாயை நமஓம் கவோமுக்திதாயை நமஓம் காலரூபாயை நமஓம் கலாகாஷ்டரூபாயை நமஓம் சதுர்ஹஸ்தாயை நம

ஓம் சாத்வி காயை நமஓம் சாது மித்ராயை நமஓம் சந்துஷ்டமனசேயை நமஓம் சதுர்வக்த்ராயை நமஓம் அம்புஜஹஸ்தாயை நமஓம் சிவவிஷ்ணுப்ரியாயை நமஓம் ஹிரண்ய கர்ப்பாயை நமஓம் சிருஷ்டிகர்த்தியை நமஓம் சத்தியலோக நிவாயை நமஓம் வேததாரின்யை நம

ஓம் லோபாமுத்ரார்சியை நமஓம் தாத்ரேயை நமஓம் விதாத்ரேயை நமஓம் பத்மாசனாயை நமஓம் த்ரைலோக்யநாதாயை நமஓம் வராபயகராயை நமஓம் வித்யாதீசாயை நமஓம் ஜகன்னாதாயை நமஓம் ரவிவம்சசூபூஜ்யை நமஓம் திவ்யாம் பரதாயை நம

ஓம் லோக பூஜ்யாயை நமஓம் சத்ய ஸ்வரூபாயை நமஓம் சத்ய வாசே நமஓம் சகுணா ரூபாயை நமஓம் வாக தீசாயை நமஓம் விரிஞ்சீநேயை நமஓம் தேவ தேவாயை நமஓம் அக்ஷமாலாதராயை நமஓம் ஹிமாசலநிவாசிநியை நமஓம் சார பூதாயை நம

ஓம் காயத்ரியை நமஓம் பவ்யாயை நமஓம் த்ரிமூர்த்திரூபாயை நமஓம் சர்வஜ்ஞாயை நமஓம் தருண்யை நமஓம் சூபாயை நமஓம் த்ரிபதாயை நமஓம் த்ரிலோசநாயை நமஓம் தச ஹஸ்தாயை நமஓம் தசாயுதராயை நம

ஓம் த்ரிவேதரூபாயை நமஓம் சந்த்ர வர்ணாயை நமஓம் நித்யாயைப்ரஹ்மபூஜிதாயை நமஓம் மகா வித்யாயை நமஓம் ஸரஸ் வத்யை நமஓம் சர்வ வித்யாயை நமஓம் சர்வமந்த்ராயை நமஓம் சுத்த வஸ்த்ராயை நமஓம் சுத்த வித்யாயை நமஓம் வித்யாயை நம

ஓம் சௌம்யாயை  நமஓம் ப்ரம்மலோக நிவாசிக்யை நமஓம் ஜல கர்ப்பாயை நமஓம் ஜலப்ரியாயை நமஓம் ஸ்வதாயை நமஓம் சோடச கலாயை நமஓம் யஞ்ஞப்ரியாயை நமஓம் யஞ்ஞமூர்த்தியை நமஓம் அக்ஷராக்ருத்யை நமஓம் ப்ரஹ்மமூர்த்யை நம

ஓம் சகஸ்ரபரமாம்பிகாயை நமஓம் விஷ்ணுஹ்ருத்காயை நமஓம் ஹம்ஸ ரூபாயை நமஓம் நிரஞ்ஜநாயை நமஓம் பஞ்சவர்ணமுக்யை நமஓம் மகாமாயாயை நமஓம் மகாமந்த்ரபலப்ரதாயை நமஓம் சர்வதந்த ரூபாயை நமஓம் மாயாபீஜநிவாசின்யை நமஓம் மாந்யாயை நம

ஓம் விசித்ராய்யை நமஓம் ஜகத்திதாயை நமஓம் சதுராயை நமஓம் சதமத்யாயை நமஓம் தசாவராயை நமஓம் சிருக்குஹஸ்தாயை நமஓம் சிருவஹஸ்தாயை நமஓம் கெண்டிஹஸ்தாயை நமஓம் அக்ஷ்ரமாலாஹஸ்தாயை நமஓம் வேத மாத்ரே நம

ஓம் பாலிகாயை நமஓம் வ்ருத்தாயை நமஓம் சர்வகாரணாயை நமஓம் சந்துஷ்டாயை நமஓம் சர்வேஷ்வர்யை நமஓம் ஆதி சக்த்யை நமஓம் பரமார்த்தப்ரதாயை நமஓம் பக்த பீஷ்டப்ரதாயை நமஓம் ரத்ணாபூஷணதேவியை நமஓம் நாத ரூபாயை நம

ஓம் ஹம்ச ரூடாயை நமஓம் தத்வ ஸ்வரூபாயை நமஓம் சச்சிதானந்த ரூபாயை நமஓம் சத்ய மூர்த்தியை நமஓம் சர்வா பீஷ்டப்பர்தாயை நமஓம் ஓங்கா ரூபாயை நமஓம் வேதஸ்வரூபாயை நமஓம் சாவித்ரியை நம

ஸ்ரீ பிராம்மி அஷ்ட சத ஸ்தோத்திரம் ஸம்பூர்ணா.

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்ய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: ஹம்ஸயுக்த விமானஸ்தேபிரஹ்மாணீ ரூபதாரிணிகௌரி சாம்ப க்ஷரிகேதேவி அம்பிகே நமோஸ்துதே.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS